மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, […]

வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ கணினி மையங்களில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக மட்டும்‌ உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல்‌ 20 வகையான வருவாய்‌ துறை சான்றுகள்‌, 6 வகையான முதியோர்‌ உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம்‌ செய்கிறார்கள்‌. அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ சான்றுகளில்‌ எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல்‌ மற்றும்‌ […]

இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இந்த […]

தேசிய வருவாய்‌ வழி உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பப்‌ படிவங்களை பதிவிறக்கம் நாளை தான் கடைசி நாள். 2022- 2023-ம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌திட்டத்‌ தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப்‌ படிவங்களை நாளை மாலை வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த […]

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் […]

வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்‌ இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ […]

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இறைச்சி கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு உத்தரவின்‌ 16-ம் தேதி திங்கள்கிழமை திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணி இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில்‌ எங்கும்‌ ஆடு,மாடு, கோழி முதலான எந்தவித உயிரினங்களையும்‌ இறைச்சிக்காகவோ, அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ, வதை செய்யவோ அல்லது […]

போகி முன்னிட்டு டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழர்‌ திருநாளான பொங்கலுக்கு முதல்‌ நாள்‌ போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில்‌ சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்‌. இந்நாளில்‌ கிழிந்த பாய்கள்‌, பழைய துணிகள்‌, தேவையற்ற விவசாய கழிவுகள்‌ ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்‌. பெரும்பாலும்‌ நமது கிராமங்களில்‌ கடைபிடிக்கப்படும்‌ இப்பழக்கம்‌ சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்‌. […]

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் விருப்பப்படி உயர் கல்வி படிப்பில் 3 விருப்பப் பாடங்களை வரும் 23-ம் தேதிக்குள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பள்ளிக்கல்வித் துறையில் இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர் கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு […]

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Wireman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,000 வரை […]