பேருந்து பயணத்தின் போது பயணிகளிம் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொது மக்கள் பயணச்சீட்டு வாங்க கொடுக்கும்போது, அரசுப்பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பேருந்தில் பயணிகள் கொடுத்தால், […]

தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள்‌ முற்றோதும்‌ போட்டிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ செய்தால்‌ அவை பசுமரத்தாணிபோல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌. தாம்‌ பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம்‌ மிக்கவர்களாக […]

கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற […]

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின் கீழ் வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கருவூலத்தில் சம்பள […]

தமிழக கடல்பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடற்பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை, மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட […]

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]

ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்‌ துறை செயலாளர்‌ அவர்கள்‌ அறிவுறுத்துதலின்படி செப்டம்பர்‌ 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில்‌ பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள்‌ காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்‌இழப்பும்‌, அவப்பெயரும்‌ ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்படுகிறது. அறிவுரைகள் ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட […]

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3,808 நூலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார். முதல் கட்டமாக 2021 மற்றும் 22-ஆம் ஆண்டில் 4, 116 நூலகங்களை புதுப்பிக்க […]