தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள […]

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி […]

தூத்துக்குடி அருகே நறுமணப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படும் திமிங்கல எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை விற்பனை செய்ய முயற்சி செய்தது […]

தூத்துக்குடியை அடுத்துள்ள சங்கரபேரி பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரவுடி கருப்பசாமி. இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி கருப்பசாமியை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து சுற்றி வளைத்து சராமாறியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவுடி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். உடனடியாக […]

ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு […]