முன்னாள் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செல்வாக்கின் கீழ் அவர் ஈரானுடனான இராணுவ மோதலுக்குள் இழுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். “எப்ஸ்டீன் கோப்புகள்” தொடர்பான சர்ச்சைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு பலவீனமான முயற்சி இது என்றும் கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.. சனிக்கிழமையன்று டெட்ராய்டில் மிச்சிகன் ஜனநாயக மகளிர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு […]

மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி […]

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இஸ்ரேலை “மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு மற்றும் ஒரு புற்றுநோய் அரசு” என்று கடுமையாக சாடி உள்ளார். இந்த கருத்துக்கள், நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குவாஜா ஆசிஃப் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் லெபனான் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் நடக்கும் மோதல்கள் தொடர்பாக ஆசிஃப் இஸ்ரேலைத் விமர்சித்து பேசினார். காசா, […]

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சுமார் 15,400 டன் LPG உடன், இந்தியக் கொடியிட்ட ஒரு கப்பல் ‘ஹார்முஸ் நீரிணையை’ வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) தெரிவித்தது. அந்தக் கப்பல் தற்போது மும்பைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று துறைமுகம் கூறியது; மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு, JNPA-வை வந்தடைந்த இத்தகைய […]

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இவ்வாறு கூறினார்.. மேலும் தனது பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை, கொடிய முறையில் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், […]

ஈரான் போரில் ஏற்பட்ட போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் இது ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றி என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே, ஈரான் இந்தப் போர்நிறுத்தத்திற்காக கெஞ்சிக் கேட்டதாக அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி டிரம்ப் வரலாற்றைப் படைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய […]

மேற்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவததற்காக, அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது சீனாதான் என்று டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்லார்… போர்நிறுத்தத்தை எட்டுவதில் சீனா ஈடுபட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் என்று தான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இதன் மூலம், இந்த மோதலுக்கு மத்தியில் சீனா மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது. மேற்கு […]

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]

தற்போது நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ஈரானின் புதிய ஆட்சியின் ஜனாதிபதி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் “தனது முன்னோடிகளை விட மிகவும் தீவிரமயமற்றவராகவும், அதிக புத்திசாலியாகவும் இருக்கும் ஈரானின் புதிய ஆட்சி ஜனாதிபதி, அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளார்! ஹோர்முஸ் ஜலசந்தி திறந்து, தடையின்றி, தெளிவாக இருக்கும்போது நாங்கள் பரிசீலிப்போம். […]