டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்ப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் […]
us
தங்கம் விலை உயர்வால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தங்கம் என்பது, நம் மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்துள்ளது. தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் […]
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவிற்கு கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் […]
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க லாரி உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “நவம்பர் 1, 2025 முதல், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25% வரி விதிக்கப்படும்” என்று […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாணவர் 28 வயதான சந்திரசேகர் போலே என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டல்லாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ஹைதராபாத்தின் லால் பகதூர் நகரை சேர்ந்த சந்திரசேகர் , பல் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை $100,000 (8.8 மில்லியன் ரூபாய்க்கு மேல்) ஆக உயர்த்தியுள்ளார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, புதிய கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை இப்போது பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குடியிருப்பாளர்கள் H-1B விசா கட்டண விலக்கு பெறலாம். “இந்த அறிவிப்பு சாத்தியமான விலக்குகளை அனுமதிக்கிறது, இதில் மருத்துவர்கள் […]
கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் […]
அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, H1B விசாக்களை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, H1B விசாக்களை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய H1B ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வால்மார்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் […]
‘Stratus’ COVID variant spreads in US: All you need to know
பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

