தனது மனைவிக்கு காதலனோடு திருமணம் செய்து வைத்த கணவன் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்‌ மிர்சாப்பூரில்‌, கணவர்‌ ஒருவர்‌ தனது மனைவிக்கு அவரது காதலனையே திருமணம்‌ செய்து வைத்த சம்பவம்‌ நிகழ்ந்துள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்‌ என்பவர் கடந்த ஆண்டு ரோஸ்‌ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால்‌ மனைவி ரோஸ்‌ தனது அண்டை வீட்டை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார்‌. […]

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் மைனர் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர். பாஜக தலைவர் பிரம்மதத் திவேதி […]

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 90 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 623 வார்டுகளைத் தவிர 17 மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன பிறகு இந்த ஆண்டு […]

உத்திர பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று கணவரும், மாமியாரும் கேட்க தொடங்கியதால் பிரச்சனை ஆரம்பித்தது. இந்த நிலையில் கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதன் காரணமாக, அந்த இளம் பெண் காவல் […]

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் டிராக்டர் டிராலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் வேதனையானது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். […]

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட கேங்ஸ்டர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சனிக்கிழமை இரவு மருத்துவர் பரிசோதனைக்காக அரசு கல்லூரி மருத்துவக் கல்லூரிக்கு […]

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் திருமணமான பெண்ணை காரில் கடத்திச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் ரிங்கு இஸ்லாம். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்து லக்னோவில் உள்ள நாகா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கைசர்பாக் என்ற பகுதிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]

டெல்லி போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை ரிக்டர் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே […]

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தால் காதலியின்   நண்பர் ஒருவரை  இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்து உரை சார்ந்தவர் ராகுல் வயது 23. அதே பகுதியைச் சார்ந்தவர் மோனிகா வயது 20 இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராகுல் மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு […]