துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, சந்திப்பு ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது, ​​இரு நாடுகளின் பிரதிநிதிகளின் அணுகுமுறையும் கடுமையாகவே இருந்தது. துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான், இஸ்தான்புல்லின் சிராகன் அரண்மனையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார். இது ஒட்டோமான் […]

உக்ரைன்-ரஷ்யா போரை கையாண்ட விதத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நெருங்கிய வட்டத்தில் நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் டிமிட்ரோ கொமரோவ் இயக்கிய ‘Year’ என்ற ஆவணப்படத்தில் உக்ரைன் அதிகர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் “ரஷ்யாவில் புடினின் ஆட்சியின் பலவீனம் உணரப்படும் ஒரு தருணம் நிச்சயமாக இருக்கும். அப்போது மாமிச உண்ணிகள் மாமிசத்தை உண்பார்கள். இது மிகவும் முக்கியமானது.. […]

ரஷ்யாவை, சீனா ஆதரித்தால் உலகப்போர் ஏற்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக சீனாவை எச்சரித்தார். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி “எங்களைப் பொறுத்தவரை, இந்த போரில் சீனா ரஷ்ய கூட்டமைப்பை ஆதரிக்காதது முக்கியம்… உண்மையில், அது எங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் […]