’தமிழன் எம்மொழியையும் கற்கத் தயார்’..! திணித்தால் “துப்பிவிடுவோம்”..!! கமல்ஹாசன் காட்டம்

அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்தி திணிப்பு பற்றி பேசிய கமல்ஹாசன், “விட்டால் தமிழன் எம்மொழியையும் கற்கத் தயாராக இருப்பான். திணித்தால் திணித்த கையிலேயே துப்பிவிடுவான். அரபு மொழி தெரிந்த பாரதியார் தான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம் என்று சொல்கிறார். நானும் அதை சொல்லலாம். நான் நடித்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பேசியுள்ளார்.

’தமிழன் எம்மொழியையும் கற்கத் தயார்’..! திணித்தால் "துப்பிவிடுவோம்"..!! கமல்ஹாசன் காட்டம்

மேலும், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சனைகளைத் திசைதிருப்ப மொழியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 11-வது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே கட்டாயம் பயற்று மொழியாக்கப்பட வேண்டும் என அப்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’தமிழன் எம்மொழியையும் கற்கத் தயார்’..! திணித்தால் "துப்பிவிடுவோம்"..!! கமல்ஹாசன் காட்டம்

மேலும், ஆங்கில மொழி பயன்படுத்தும் இடங்களிலும் அதைப் படிப்படியாக ஒழித்துவிட்டு, இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும். பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளை, ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியில் தயாரிக்க வேண்டும். அரசுப் பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்தியைப் பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம்கூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோல, இந்தியைத் திணிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அக்குழு சமர்ப்பித்துள்ளது. இது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனித்தன்மை கொண்ட ஒவ்வொரு மொழியையும் பாதுகாப்பதை விடுத்து, இந்தியை மட்டும் திணிக்க முற்படுவது தேச ஒற்றுமைக்கு எதிரானது. மக்களைப் பிரித்துப் பார்க்கும் இந்த முயற்சியை எந்த மாநிலமும் ஏற்காது. கட்டுக்கடங்காமல் போயிருக்கும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை மறக்கச் செய்ய, மொழியைப் பயன்படுத்துகிறது பாஜக அரசு. மக்களைப் பிரிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, கொஞ்சம் பொதுநலனிலும் அக்கறை காட்டுங்கள் மத்திய அமைச்சர்களே..!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்’..!! பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்..!!

Wed Oct 12 , 2022
அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றும் டிஆர்பியில் முதல் இடத்தையும் பெற்று வருகிறது. தற்போது இந்தியில் 16-வது சீசன் ஆரம்பித்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். […]
’அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்’..!! பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்..!!

You May Like