பேருந்து கட்டணம் உயர்த்த தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது…! நயினார் நாகேந்திரன் அதிரடி

Nainar nagendran 2025

பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொன்னதும் அதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதும் சரிதான். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வி.

மக்களின் விருப்பப்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் அனைவருக்கும் சமக் கல்வி வழங்கும் தேசியக் கல்வி கொள்கையை திமுக அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும். மேலும், திமுக அரியணை ஏறியது முதல் மின்சாரக் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, ஆவின்பால் விலை, முத்திரைக் கட்டணம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் விலைவாசி மற்றும் வரி உயர்வால் விழி பிதுங்கி கிடக்கும் தமிழக மக்கள், தங்கள் அன்றாடப் போக்குவரத்துக்குத் தேவையான பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வார்களா..?

ஆட்சிக் காலம் முடிவதற்குள் மீதமிருக்கும் பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்துவிட்டது என்பதும், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி விளம்பரப்படுத்துவது கண் துடைப்பு நாடகம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, பேருந்து கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் முடிவை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாது..!! விதிகளில் மாற்றம்..

Vignesh

Next Post

விவசாயிகளே!. ஆண்டுதோறும் ரூ.6000 பெற வேண்டுமா?. இன்றே கடைசி நாள்!. உடனே இத பண்ணிடுங்க!.

Sat May 31 , 2025
நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]
PM kisan deadline 11zon

You May Like