புத்தாண்டைக் கொண்டாட தயாராகும் தமிழகம் – ரூ.400 கோடிக்கு  மது விற்பனை இலக்கு!…

புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே விழுந்து காயம் அடைவோருக்காகவே புத்தாண்டின் போது அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஆண்டுதோறும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தற்போதே ஹோட்டல் அறைகள் எல்லாம் புக் செய்யப்பட்டுவிட்டன.


இந்த ஏற்பாடெல்லாம் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, வரும் புத்தாண்டிற்கு ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 5000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் விற்பனையை விட பண்டிகைக் காலங்களில் மதுவிற்பனை இருமடங்கு அதிகரிக்கும் அதனை கணக்கில் கொண்டு இந்த டார்கெட் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் 3 நாட்களில் ரூ.675 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருந்தது. தற்போது ஆங்கில புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை உள்ளது. வார இறுதி நாட்களில் புத்தாண்டு தினம் வருவதால் அதையொட்டி 2 நாட்கள் மதுவிற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KOKILA

Next Post

மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசி துன்புறுத்தியதாக சித்தார்த் கூறிய குற்றச்சாட்டு உண்மையா? - அதிகாரி விளக்கம்

Thu Dec 29 , 2022
மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது தாய் தந்தையருடன் மதுரை விமான நிலையம் வந்ததாகவும், மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு […]
Siddharth

You May Like