டெல்டா மாவட்டத்தில் திடீர் மழை காரணமாக விவசாயிகள் கவலை…..!

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இந்த நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகின்றது.


திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள். தற்சமயம் பெய்து வரும் சாரல் மழை காரணமாக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன.

விவசாயிகள் தார்பாய்களை வைத்து நெல் மூட்டைகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கலாம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நகர் பகுதியில் பல இடங்களில் லேசான தூரல் மழையும் பல பகுதிகளில் மழை பெய்வதைப் போல வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது.

Next Post

100 நாள் வேலை திட்டம்…..! நீதிமன்றம் அரசுக்கு விதித்த அதிரடி உத்தரவு…..!

Tue Feb 28 , 2023
தென்காசி மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனதில் தருகாபுரம் கிராம ஊராட்சியில் கண்மாய் நிலமான இரு கரையான் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதாக தெரிவித்து முறையான அனுமதி பெறாமல் தனியார் விவசாய நிலத்தில் வேலை பார்க்க வைத்த ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி […]
NREGA

You May Like