Tamilisai Soundararajan | மீண்டும் அரசியலில் குதித்த தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதி இதுதான்..!!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்த நிலையில், ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் ஆக செயல்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தரராஜன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டி இடுவதற்காகவே அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ”ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.

புதுச்சேரி தொகுதியில் போட்டியில்லை. எந்தத் தொகுதி என்று பாஜக மேலிடம் அறிவிக்கும்” என்று தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.

எந்தத் தொகுதியில் போட்டி..?

தமிழிசை கடந்த முறை போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More : Shocking | மக்களே உஷார்..!! 6,744 பேருக்கு அம்மை பாதிப்பு..!! சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை..!!

Chella

Next Post

Crime | ”புருஷனை விட்டு எவன் கூட பேசிட்டு இருக்க”..!! அக்காவை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி..!!

Mon Mar 18 , 2024
ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சுபாவேணி அய்யனார்குளத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகன் […]

You May Like