2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு…! மத்திய அரசு

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, 7.81 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Jal Jeevan Mission

30.01.2023 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், சுமார் 11.05 கோடி குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் இணைப்பு வசதி  பெற்றுள்ளன. இதை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. மாநாடுகள், பயிலரங்குகள், காணொலி மாநாடுகள், மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு , தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, ஊராட்சி அளவில் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் பொதுத்தளத்தில் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் நிதி மேலாண்மைக்கான பொது நிதி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

11 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும்...!

Sat Feb 4 , 2023
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும். இதேபோல், சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முன்னாள் ராணுவ […]
Fees

You May Like