நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் திருத்தம் செய்யலாம்…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

tn school 2025

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக உள்ளீடு செய்து சமர்ப்பித்துவிட்டால் அதை சரிசெய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 29-ம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு பிறகு, ஆன்லைன் விண்ணப்பங்கள் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அதன்பிறகு விண்ணப்பத்தில் எவ்விதமான திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள்தான்!. தடயவியல் ஆய்வகம் அதை நிரூபித்துள்ளது!. அமித் ஷா திட்டவட்டம்!

Thu Jul 31 , 2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகள், ஆபரேஷன் மகாதேவ் திட்டத்தின் கீழ் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலில் அவர்களின் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தில் ஷா இவ்வாறு கூறினார். இதனுடன், […]
MixCollage 29 Jul 2025 11 50 AM 8402 2025 07 3577a5c5b58f5a5b816aaae4404d7c32 16x9 1

You May Like