திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணனுக்கு, எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரித்துள்ளது. ஆரணி மற்றும் போளுர் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பதவியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர்களையும் அதிமுக தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணனுக்கு, எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 13 அன்று மறைந்த தீவிர விசுவாசியான இவருக்குப் பதவி வழங்கப்பட்ட செய்தி, அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் காலமான முத்துக்கிருஷ்ணனுக்கு கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு, பகுதியில் உள்ள முக்கிய தலைவர்கள் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். மேலும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி போடவில்லை, ஆனால் இறந்தவருக்கு கட்சி பதவியா என கேள்வி வருகின்றனர்.