#திருவாரூர் : தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..! 

திருவாரூரில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் 30 வயது உள்ள வாலிபர் வசித்து வருகிறார். இவரது , தாய்மாமன் மகளான 17 வயது நிறைந்த சிறுமிக்கும், இவருக்கும் திருமணம் செய்வதாக சென்ற 3 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் நடைபெற்றுள்ளது. 


தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண நாளில் காலை 6 மணி முதல் 7.30 மணி முகூர்த்த நேரத்தில் திருமணம் நடை பெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. முகூர்த்த நேரத்தில் காலை 6.30 மணி அளவில் மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் மந்திரங்கள் ஓதி கொண்டு மணமகனிடம் தாலியை கொடுக்க தயாராகிய நிலையில், அப்போது மணமகனும், மணமகள் கழுத்தில் தாலியை கட்ட தயாராகினார். இந்த நிலையில், 17வயதான  மணப்பெண் சிறுமி கத்தி கூச்சலிட்டு தாலி கட்டுவதை தடுத்துள்ளார். 

இதனால் மணமகன் அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றதை கண்டு மண்டபத்தில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மணமகள், தனது செல்போன் மூலமாக சைல்டு லைனை எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். 

மேலும் தனக்கு விருப்பம் இல்லாமல் இந்த கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர் என பெற்றோரின் மீதே புகார் தெரிவித்தார் அந்த சிறுமி. இதனையடுத்து சைல்டுலைன் அலுவலர்கள், மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, திருமண மண்டபத்திற்கு வந்திருந்த போலீசார் திருமணத்தை தடுத்து சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

நெருங்கி வரும் சுனாமி..!! அதிகாலையிலேயே ஆட்டம் காட்டிய கட்டிடம்..!! தெறித்து ஓடும் மக்கள்..!!

Mon Nov 21 , 2022
கிரீஸ் நாட்டில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். கிரீஸ் நாட்டில் இன்று (நவ.21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) படி, இந்த நிலநடுக்கம் கிரேக்கத்தில் உள்ள Siteia விற்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.25 மணியளவில் நிலநடுக்கம் […]
நெருங்கி வரும் சுனாமி..!! அதிகாலையிலேயே ஆட்டம் காட்டிய கட்டிடம்..!! தெறித்து ஓடும் மக்கள்..!!

You May Like