குட் நியூஸ்… மக்களே சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீடிப்பு…! அபராதம் கூட கிடையாது…

நடப்பு ஆண்டிற்கான சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.


தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள QR Code பயன்படுத்தியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் செலுத்தலாம்.

Vignesh

Next Post

Alert: வரும் 24-ம் தேதி உருவாக போகும் புயல்...! இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை எச்சரிக்கை...!

Fri Oct 21 , 2022
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி நேற்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அக்டோபர் 23-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பிறகு […]
bengaluru rain 4 1

You May Like