நாட்டில் தற்போது பரவும் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது..!! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Minister Ma Subramanian

தமிழ்நாட்டில் கொரானா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “தற்போது பரவும் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பெயர்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது. தற்போதைய சூழலில் அனைவருக்கும் பரிசோதனை செய்தால் பலருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 19 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் வீரியமில்லாத ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலமை தீவிரமடையாமல் இருக்க முகக்கவசம், கை கழுவுதல். சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது.

முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அறிவுறுத்தல் தான் கட்டாயம் இல்லை. வயது முதிர்ந்தோர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அனிவது கட்டாயம். கொரானாவை விட மோசமானது வதந்தியை பரப்புவது. சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததற்கு இணை நோய் தான் காரணம். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது நல்லது” என்றார்.

Read more: இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்..?

Next Post

“எவனும் கூட்டணிக்கு வரமாட்டான்”..!! எடப்பாடியை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சிரித்து என்ஜாய் செய்த புஸ்ஸி ஆனந்த்..!!

Sat May 31 , 2025
அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் […]
EPS 2025

You May Like