சூப்பர் அறிவிப்பு…! வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம்…!

Income Tax 2025

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.


கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும் என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை அப்லோடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், 2025-26 க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்குத் தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read more: Happy Birthday MS Dhoni| கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள்!.

Vignesh

Next Post

"பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்வது ஒரு கோட்பாடாக இருக்க வேண்டும்; வசதிக்காக அல்ல"!. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Mon Jul 7 , 2025
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]
BRICS pm modi 11zon

You May Like