இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…..! திருவள்ளூர் அருகே 6 பேர் அதிரடி கைது….!

திருவள்ளூர் அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, நடைபெற்ற தகராறு 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதாவது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்துள்ள அத்திமாஞ்சேரி பேட்டையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இரவு முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றுள்ளது. அப்போது மற்றொரு பிரிவினர் சட்ட மேதை பிஆர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் அவருடைய புகைப்படத்துடன் ஊர்வலம் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஒரு பகுதியில் இருதரப்பை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாக்குவாதம் உண்டாகி அதன் பிறகு கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது கார், ஆட்டோ, ஜேசிபி உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அம்பேத்கர் ஊர்வலத்தில் பங்கேற்ற விக்னேஷ், சந்தோஷ், பிரவீன், சந்துரு, பிரகாஷ் சாய் கிரண் உள்ளிட்ட 6️ பேர் மீது பெதட்டூர் பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

.

Next Post

ஆத்தாடி இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் மிருணாள் தாக்கூர்..!! படு வைரலாகும் ஃபோட்டோஸ்..!!

Sun Apr 16 , 2023
சீதா ராமம் படத்தில் பாரம்பரிய உடையணிந்து நடித்து அசத்திய நடிகை மிருணாள் தாக்கூரின் கவர்ச்சி புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன. மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரையும் அடையாளத்தையும் கொடுத்தது தென்னிந்திய சினிமா தான். கடந்தாண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்திருந்த சீதா மகாலட்சுமி […]
WhatsApp Image 2023 04 16 at 10.43.33 AM

You May Like