இபி மீட்டர் மாறுது.. தமிழ்நாட்டில் மாதாந்திர மின் கட்டண முறை மீண்டும் அமல்..? அரசின் மாஸ்டர் பிளான் 

EB Bill 2025

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கட்டண முறையை மீண்டும் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது.


மின்வாரிய (TANGEDCO) உயர்நிலை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மாதாந்திர மின் கணக்கீட்டை செயல்படுத்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. சிக்கல்கள் ஏதும் இல்லையெனில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் படிப்படியாக அமலாகும். புதிய மின் இணைப்புகளுக்கான காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கடைகள் போன்ற தாழ்வழுத்த (LT) பிரிவுகளில், தேவையான வசதிகள் இருந்தால் 3 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும். கூடுதல் உபகரணங்கள், சிறிய மின்மாற்றிகள் போன்றவை தேவைப்பட்டால், 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்.

மீட்டர் வாங்கும் புதிய நடைமுறை: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மீட்டர் வாங்கினாலும், நுகர்வோர் டேம்பர்-ப்ரூஃப் சரிபார்ப்பிற்கு டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” அடிப்படையில் பொருத்துவார்கள். முன்பு டாங்கெட்கோ மொத்தமாக வாங்கி, சோதனை செய்து அனுப்பியது.

தற்போது, டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் மக்கள் நேரடியாக வாங்கலாம். இருப்பினும், ஈபி மீட்டர் தட்டுப்பாடு ஒரு சிக்கலாக உள்ளது. இது புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல்நிலை கேபிள் பகுதிகளில் நிலத்தடி கேபிள் பொருத்தும்போது, அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இதனை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை அடுத்த பில்களில் சரிசெய்ய அல்லது திருப்பி வழங்க வேண்டும். மாதாந்திர மின் கட்டணம் அறிமுகமாகும் பட்சத்தில், நுகர்வோருக்கு தெளிவான கணக்கீடு, சிறிய தொகுதிகளில் கட்டணம் செலுத்தும் வசதி போன்ற பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மாதாந்திர மின் கட்டண முறை நடைமுறைக்கு வந்தால், நுகர்வோருக்கு சீரான மற்றும் தெளிவான பில் விவரங்கள் கிடைக்கும், ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலுத்த வேண்டிய சுமை குறையும், மீட்டர் வாசிப்பு மற்றும் கணக்கீடு துல்லியமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி.. கீழே விழுந்து பலத்த காயம்..!!

English Summary

The government is considering bringing back the monthly electricity bill system, one of the DMK’s election promises.

Next Post

ரஜினி பட நடிகையின் உறவினர் கொலை.. பார்க்கிங் தகராறில் ஏற்பட்ட சோகம்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

Fri Aug 8 , 2025
Actress Huma Qureshi's relative was murdered in a parking dispute in Delhi's Nizamuddin.
huma

You May Like