கண்ணை பறித்த தங்க செயின்.. இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய கள்ளக்காதல் ஜோடி.. நடுரோட்டில் கதறிய பிஞ்சி குழந்தை.. பகீர் சம்பவம்..

thiruvannamalai crime2

திருவண்ணாமலை மாவட்டம் கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அம்சா (28). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நிவிலனை அழைத்து அம்சா திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் இருவரும் வீடு திரும்பவில்லை.


இரவில் சாலையோரம் குழந்தை மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தது. பெண் ஒருவர் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்தபோது அது சக்திவேலின் குழந்தை நிவிலன் என்பது தெரியவந்தது. போலீசார் சக்திவேலை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.

ஆனால் அம்சா பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடினர். இந்த நிலையில் நேற்று ஏந்தல் சம்மந்தனூர் கரும்புத் தோட்டத்தில் மூட்டையில் இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அம்சா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலை செய்தது கழிக்குளம் பகுதியை சேர்ந்த நேத்ரா (30) எனத் தெரியவந்தது. போலீசார் அளித்த தகவலின்படி, கணவரைப் பிரிந்த நேத்ராவுக்கு திருப்பதி என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது..

அம்சா மருத்துவமனைக்குச் செல்லும்போது நேத்ரா ஆட்டோவில் பார்த்து பேச்சுக் கொடுத்தார். ஒரே ஊர் என்பதால் அம்சா சகஜமாகப் பேசியுள்ளார். அம்சாவின் 4 பவுன் தங்கச் செயினைப் பார்த்த நேத்ரா அதைப் பறிக்கத் திட்டமிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று தாக்கி செயினைப் பறித்துள்ளார்.

பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை சாக்கில் கட்டி கரும்புத் தோட்டத்தில் வீசியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க குழந்தையை எஸ்.கே.பி கல்லூரி அருகே விட்டுவிட்டு தப்பியுள்ளார். நேத்ராவையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 பவுன் தங்க செயினுக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் மாற்றம்..!! குரு, சனியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை..!!

English Summary

The incident of a woman being kidnapped and murdered for jewelry in Tiruvannamalai has caused shock.

Next Post

தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் தீவிரமடையும் பருவமழை..!! மீண்டும் உருவாகிறது புயல்..!! இனிமே தான் சம்பவமே இருக்கு..!!

Mon Nov 10 , 2025
வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]
Rain 2025

You May Like