வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது.. அம்பாலால் குழுமம், ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்ஸி உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.. வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
இதே போல் அண்ணாநகரில் அசோக் ரெசிடென்ஸி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. ஐயப்பன் தாங்கலில் உள்ள அசோக் ரெசிடென்ஸி ஹோட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.. இந்த சோதனையின் முடிவில் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பது தெரியவரும்..