திருவெறும்பூர் மாவட்டம், கூத்திப்பேரி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் அருகே பழங்கானங்குடியைச் சேர்ந்த சுதாகர் என்பவரது காளையும் கலந்து கொண்டது.
வாசலில் காளையை உரிமையாளரால் பிடிக்க முடியவில்லை. சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் காளையை தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி – தஞ்சை ரயில் பாதையில் குமரேசபுரம் அருகே ஜல்லிக்கட்டு காளை ரயிலில் அடிபட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று காளையை பார்த்து கதறி அழுதனர்.