கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தடம்பட்டுத்தாளம் பகுதியில் திருமணமான தகவலை மறைத்து, இளம்பெண் ஒருவரை தனது காதலால் ஏமாற்றி வந்த வைஷாகன் (36) என்பவர், இறுதியில் அந்தப் பெண்ணையே கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரும்புப் பட்டறை நடத்தி வந்த வைஷாகனின் இரட்டை முகமும், அவர் செய்த அருவருக்கத்தக்க செயலும் கேரள மாநிலத்தையே உறைய வைத்துள்ளது.
26 வயதான அந்த இளம்பெண், வைஷாகனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தாலும், தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்தத் திருமணப் பேச்சால் ஆத்திரமடைந்த வைஷாகன், தனது ரகசிய உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்தப் பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டான். இதற்காகத் தனது பட்டறைக்கே அந்தப் பெண்ணை வரவழைத்த அவன், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். பதறிப்போய் அவனைத் தடுக்க வந்த பெண்ணை, எதிர்பாராத நேரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.
இந்தக்கொலையின் உச்சகட்ட கொடூரமாக, அப்பெண் உயிரிழந்த பின்னரும் அவனது காமவெறி அடங்கவில்லை. சடலமாகி கிடந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டு தனது வக்கிரம் நிறைந்த இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளான். பின்னர், இந்த மரணத்தைத் தற்கொலை போல சித்தரிக்க திட்டமிட்ட வைஷாகன், சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளான். அதுமட்டுமன்றி, தனது மனைவியின் மூலமாகவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கச் செய்து, எதுவுமே தெரியாதது போல ஒரு பெரிய நாடகத்தை ஆடியுள்ளான்.
இருப்பினும், குற்றவாளியின் இந்த திட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வைஷாகனின் நடமாட்டத்தில் இருந்த சந்தேகத்திற்குரிய மாற்றங்களை போலீசார் கவனித்தனர். அவனிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலியைக் கொன்று சடலத்தோடு உடலுறவு கொண்ட உண்மையை அவன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து, குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் மதிய தூக்கம்..!! ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ரகசியம்..!!



