Accident | முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்த ஆம்னி பேருந்து..!! அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!! இருவர் பலி..!!

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பால் பண்ணை அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பாஜகவை எதிர்த்து நிற்க துணிவு இல்லையென்றால் ஏன் அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறார்..? எடப்பாடி மீது கடும் விமர்சனம்..!!

Chella

Next Post

சிறுமி மரணம் எதிரொலி!… ஆன்லைனில் மோசமான கேக்கை எவ்வாறு கண்டறிவது?

Tue Apr 2 , 2024
Cake: பஞ்சாப்பில் பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைனில் மோசமான கேக்கை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பன்லால். இவரின் பத்து வயது பேத்தி மான்விக்கு கடந்தவாரம் பிறந்தநாள் வந்துள்ளது. பேத்தியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு ‘கேக் கனா’ (cake kanha) என்ற கடையிலிருந்து சாக்லேட் கேக் ஒன்றை […]

You May Like