சென்னை மக்களே..!! 2 நாட்களுக்கு விடுமுறையாம்..!! உடனே வாங்கி வெச்சிக்கோங்க..!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகளை செய்துள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் உயர்நீதிமன்றம், திரையரங்குகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழங்கள் சந்தையான சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் விதமாக நாளையும், நாளை மறு தினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Read More : குட் நியூஸ்..!! இனி ரேஷன் கடைக்கு ஒருமுறை சென்றாலே போதும்..!! ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!!

Chella

Next Post

மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம்..!! தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Apr 17 , 2024
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Senior Associate, Junior Associate, Project Associate மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் […]

You May Like