ரவுடியை போல் அடித்து மிரட்டும் காவல் உதவியாளர்..! டாஸ்மாக்கில் ரூ.10 அதிகம் விற்பனை… கொந்தளித்த சவுக்கு சங்கர்..!

கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே கேள்வி கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது, பிறகு அங்கு வந்த காவலர்களில் ஒருவர், மது பாட்டில்களுடன் இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளார், அங்கிருந்த மற்றொரு காவலருடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அதிர்ந்த அவர், வாகனத்தை எடுத்து சென்ற காவலருக்கு போன் செய்து பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பதாக கூறினார், அதன் பிறகு அங்கு வந்த காவலர், எடுத்து சென்ற இருச்சக்கர வாகனத்தையும் மது பாட்டில்களையும் இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.

Subscribe to my YouTube Channel

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், பொதுமக்களிடம் மட்டும் அதிகாரத்தை காட்டுவார்கள், இதோ இந்த மதுபானக்கடையில் பத்து ரூபாய் அதிகம் விற்கிறார்கள் அதை எல்லாம் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று மன வேதனையை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி அவரை திட்டியது மட்டும் இல்லாமல், அதிகாரத்தை மீறி, ஒரு ரவுடியை போல் அவரை கண்டபடி அடித்து விரட்டி அடிக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது. காவலர்கள் பொதுமக்கள் மீது இப்படி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவது, எத்தனை ஆட்சி மாறினாலும் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த லாக்டவுனில் மதுபானக்கடைகளில் காவலர்கள் தாக்குதல் நடித்தியதை விமர்சித்த தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் “இப்படி தாக்க இந்த உதவி ஆய்வாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Newsnation_Admin

Next Post

மத்திய அரசு வழங்கும் தேசிய குழந்தைகள் விருது...! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

Tue Jul 11 , 2023
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31, ஜூலை 2023-ல் இருந்து ஆகஸ்ட் 31,2023-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகள், 2024-ற்கான விண்ணப்பங்களின் பதிவு தேசிய விருதுகள் இணையதளத்தில் (https://awards.gov.in, ) தற்போது தொடங்கியுள்ளன. இவ்விருதுகள் வீர தீரம், விளையாட்டுக்கள், சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமைக் கண்டுபிடிப்புகள் […]
studenta

You May Like