சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச்-ன் விலை ட்ரெண்ட் ஆனது, ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கிடைத்தது என்று பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுகவினர் இதை விடுவதாகவே தெரிவதில்லை, வார் ரூம் போட்டு பெரிய முதலாளிகளை மிரட்டி, அன்பளிப்பாக வாங்கிய வாட்ச்சுக்கு பில் எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி வந்தனர்.
அதிலும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் தினமும் அண்ணாமலையை கலாய்த்து பதிவிட்டு வந்தார், அப்படி சில நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜி பில் இருக்கா இல்லையா? என்று கேள்வி எழுப்பினார், மேலும் “காலைல 6மணி இருக்கும்.கோழி கொக்கரக்கோ…. எனும் சினிமா வசனத்தையும் போட்டு கலாய்த்து தள்ளினார்.
ஆனால் அண்ணாமலை நேரடியாக இதற்கு பதில் அளிக்காமல் ஏப்ரல் மாதம் இதற்கான பில்லை கொடுக்கிறேன். அத்துடன் சேர்த்து அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி இருந்தார். மேலும் ரபேல் இந்தியாவை பாதுகாக்கும்.. இந்த ரபேல் வாட்ச் திமுகவை அழிக்கும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது கோவை முழுவதும் “டிக்..டிக்..டிக்.. பயந்துட்டியா.. மல” என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரபேல் வாட்ச்-ன் போட்டுவும் மேலும் “டிக்..டிக்..டிக்” என வாட்சின் சௌண்டும் “பயந்துட்டியா மல” என வாசகமாக இருந்ததால் அண்ணாமலையை கலாய்த்து தான் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோவையில் தலை தூக்கியுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.