இனிதான் மழையின் ஆட்டம் ஆரம்பமாக போகுது!! வெதர்மேன் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என மிகத் தீவிரமாக இருக்கும் என்று வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.


இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு பகுதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். இது வெறும் டிரையிலர் என கூறியுள்ளார். இனிமேல்தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளார். 11-லிருந்து 14ம் தேதி வரை மழை கோரத்தாண்டவம் ஆடும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னை ஹாட்ஸ்பாட்டாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முதலாக உருவான சிட்ராங் புயல் தமிழகத்தை தவிர்த்து விட்டு வங்கதேசம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெரும் மழையை கொட்டித் தீர்த்தது.

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!!

Tue Nov 8 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.இம்மாத இறுதிக்குள் இது பற்றிமுடிவு செய்யப்பட உள்ளது. ஒருவேளை முடிவெடுக்கப்படும் பச்சத்தில் 52 லட்சம் ஊழியர்களின் குறைந்த பட்ச […]
money

You May Like