” இந்தியாவில் 95% முட்டாள்கள்கள்..” ஷாருக்கானின் பதான் படத்தை கடுமையாக சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி..

ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.. சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பதாம் படம் நேற்று முன் தினம் வெளியானது.. இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில், இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வரலாறு படைத்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது..

pathan 3

இந்நிலையில் பதான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பிறகு இந்தியாவில் முட்டாள்கள் பற்றிய தனது மதிப்பீடு 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பதான் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து இந்தியாவில் முட்டாள்கள் பற்றிய எனது மதிப்பீடு 90% லிருந்து 95% ஆக உயர்ந்துள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும் அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் “ திரைப்படங்கள் கலையின் ஒரு வடிவம், கலையைப் பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன.. ஒன்று.. கலைக்காக கலை, 2-வது சமூக நோக்கத்திற்காக கலை. இந்த இரண்டு கலை வடிவங்களும் பொழுதுபோக்கை வழங்குகின்றன. கலைகள் என்பது பொழுதுபோக்கை வழங்குவதைத் தவிர்த்து சமூகப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.. அவை சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.. நாட்டிற்கு இரண்டாவது கலை வடிவம் தேவை..

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் நிலை 101-ல் இருந்து 107க்கு சரிந்துள்ளது, வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, மக்களுக்கு சரியான சுகாதாரம் நல்ல கல்வி இல்லை.. அதே நேரம் மக்களுக்கு பொழுதுபோக்கும் தேவை என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மைதான், ஆனால் பொழுதுபோக்கை சமூக நோக்கத்துடன் இணைக்கலாம்.. அதற்கு ராஜ் கபூரின் ‘ஆவாரா’, ஸ்ரீ 420′, ‘பூட் பாலிஷ்’, ‘ஜாக்தே ரஹோ, அனாதி’ அல்லது சத்யஜித் ரே, சார்லி சாப்ளின், செர்ஜி ஐசென்ஸ்டீன் போன்றவர்களின் படங்களின் உதாரணங்களை சொல்லலாம்..

அதே நேரம் அமிதாப் பச்சன், தேவ் ஆனந்த் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் திரைப்படங்களுக்கு சமூக நோக்கம் இல்லை.. வலதுசாரி குழுக்கள் படத்தை குறிவைத்தது போல் தான் படத்தை விமர்சிக்கவில்லை.. நான் காவிக் கும்பலை போல, பதானுக்கு எதிரானவன் அல்ல.. நான் ஷாருக்கான் அல்லது தீபிகா படுகோனை நான் எதிர்க்கவில்லை.. இந்த படத்தில் சமூக நோக்கம் இல்லை.. அதனால் எதிர்க்கிறேன்..

உங்களால் மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாவிட்டால், அவர்களுக்கு சர்க்கஸ் கொடுங்கள்” என்று ரோமானியப் பேரரசர்கள் சொன்னார்கள். இன்று அவர்கள் இருந்திருந்தால் “மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியாவிட்டால், பதான் போன்ற படங்களை அவர்களுக்குக் கொடுங்கள் என சொல்லி இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்..

1newsnationuser1

Next Post

தூங்கிக் கொண்டிருந்த பெண் திடீரென எழுந்து குடும்பத்தையே வெட்டிய கொடூரம்..!! காரைக்காலில் அதிர்ச்சி..!!

Fri Jan 27 , 2023
4 மாத குழந்தை, பாட்டியை மண்வெட்டியால் கொன்ற பெண், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்களையும் கொடூரமாக தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி (35). இவர், பிரசவத்துக்காக, காரைக்கால் மாவட்டம் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று […]
Murder knife blood 1

You May Like