கோவையில் ஒரு வாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்னர் இதுவரை வேலையும் பார்க்கவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றது.ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன். ஒரு வாரத்தில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 2011 ஆண்டுகளுக்கு பின் திருச்சி, பாலக்காடு சாலைகள் உள்பட அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற பால வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநகராட்சிக்கு அதிக அளவில் வருமானம் வருகின்றது. சாலை பணகளை தொடங்க வேண்டும் எஇந்த சாலைகள் ஒரு வாரத்திற்குள் போடப்பட வேண்டும் . இல்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் நான் அமைச்சராக இருந்தபோது என்னுடன் எத்தனை அதிகாரி இருப்பார்கள் இப்போது யாரும் இல்லை. நான் எம்.எல்.ஏ.தான். ஆனாலும், மக்களுக்கு பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். என்றார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்… யாருக்குமே இங்கு நல்லது செய்யப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும். சென்னையில சாலைகள் நன்றாக உள்ளதாக கூறுகின்றனர். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. நன்றாக கூட மழை பெய்யவில்லை என அவர் தெரிவித்தார்.