வீட்டின் முன்பு கதறிய மாணவி..!! ஓடிவந்த பெற்றோர்..!! தலைதெறிக்க ஓட்டம் பிடித்த வாலிபர்..!! நடந்தது என்ன..?

கேரள மாநிலத்தில் வீட்டின் முன்பு கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டிற்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினரும், அப்பகுதியில் இருந்தவர்களும் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும், அங்கிருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டின் முன்பு கதறிய மாணவி..!! ஓடிவந்த பெற்றோர்..!! தலைதெறிக்க ஓட்டம் பிடித்த வாலிபர்..!! நடந்தது என்ன..?

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி சங்கீதாவை கொலை செய்த வாலிபர் யார்..? எதற்காக கொலை செய்தார்..? காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 அப்டேட்!

Wed Dec 28 , 2022
தமிழ் சினிமாவில் பல ரொமான்டிக் திரைப்படங்களை இயக்கி அதனை வெற்றி திரைப்படங்கள் ஆக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி தற்போது வரையில் தமிழகத்தில் இருக்கின்ற திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதோடு பொன்னியின் செல்வன் […]
ponniyin selvan 1662514282

You May Like