சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுத தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் , அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 17-ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள் பள்ளியில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற சிறுபான்மையினர் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் பகுதி1-ல் தமிழ் மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுதவும் மற்றும் பிற மாநிலத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டில் பிற கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி1-ல் பிற மொழிப்பாடத்தில் தேர்வெழுதுவதற்கும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் அதனை 20-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் திருத்தம் செய்ய வேண்டும். மாணவரின் அனைத்து வகையான திருத்தங்களும் EMIS PORTAL-லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.