அடி தூள்…! தமிழகம் முழுவதும் 3,000 நூலகங்கள் புதுப்பிப்பு…! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3,808 நூலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார். முதல் கட்டமாக 2021 மற்றும் 22-ஆம் ஆண்டில் 4, 116 நூலகங்களை புதுப்பிக்க 91 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 3, 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடியே 27 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது தவிர்த்து மீதமுள்ள நூலகங்கள் 2024-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காட்டு தீ போல் பரவும் டெங்கு...! மொத்தம் 7 மாவட்டத்திற்கு எச்சரிக்கை...! இது தான் முக்கிய அறிகுறிகள்...!

Wed Nov 16 , 2022
கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 7 மாவட்டங்களில் கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது: திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒவ்வொரு வாரமும் பொது இடங்கள், வீடுகள் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதன் மூலம் […]
Dengue

You May Like