கணவன் மற்றும் கள்ளக்காதலனுடன் ஒரே அறையில் தங்கிய மனைவி.. ஜன்னல் வழியே எட்டி பார்த்தவருக்கு காத்திருந்த ஷாக்..!! என்ன நடந்தது..?

affair

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 49). இவரது மனைவி விஜயகுமாரி (44). கலியபெருமாளின் நண்பர் லோகநாதனுடன் கடந்த 30 ஆம் தேதி இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு பேராலயத்திற்கு சொந்தமான ஒரு விடுதியில் இரண்டு நாட்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.


பக்கத்து அறையில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். விடுதி மேலாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, விஜயகுமாரி மற்றும் லோகநாதன் இருவரும் விஷம் குடித்து இறந்த நிலையில் இருந்தனர். கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அறையில் கிடைத்த கடிதத்தில் “நாங்கள் மூவரும் தற்கொலை செய்யப்போகிறோம், யாரும் காரணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், கலியபெருமாளின் மனைவி விஜயகுமாரி மற்றும் நண்பர் லோகநாதனுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் ஊரை விட்டு ஓடியதால், அதிர்ச்சியடைந்த கலியபெருமாள் மனைவிக்காக போலீசில் புகார் அளித்திருந்தார்.

பின்னர் மனைவி திரும்பியதும் அவர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூவரும் ஒன்றாக வேளாங்கண்ணி வந்து அதன் பின்னர் தற்கொலை செய்து கொண்டனர். கள்ளக்காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: நீங்கள் உயிரிழந்த பிறகு பீட்சாவுக்கு பணம் கொடுத்தால் போதும்..!! இப்படி ஒரு வினோத விளம்பரமா..?

English Summary

The wife who stayed in the same room with her husband and the murderer.. The shock awaited the one who looked through the window..!

Next Post

BREAKING | தெலங்கானாவில் பயங்கரம்..!! அரசுப் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பலி..!!

Mon Nov 3 , 2025
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிர்சாகுடா அருகே நடந்த ஒரு விபத்து மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தண்டூர் பணிமனையைச் சேர்ந்த ஆர்.டி.சி. பேருந்து ஒன்று, ஜல்லிக் கல் பாரம் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த ஜல்லிக் கல் முழுவதுமாகப் பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த […]
Accident 2025 1

You May Like