#சென்னை :மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்த இளம்பெண்..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள அடையாறில் இந்திரா நகர் 3வது குறுக்கில் நிஷா (29) என்ற பெண் , பெசன்ட் நகரில் 5வது அவென்யூ இடத்தில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார். 


இந்த இடத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியமான முறையில் விபசார தடுப்பு பிரிவினை சேர்ந்த துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி அவர்களின் தலைமையிலான போலீசார் நேற்று மசாஜ் சென்டர்க்கு சென்று சோதனை செய்துள்ளனர். 

இந்த நிலையில் , நிஷா தன்னுடைய ஆண் நண்பரான கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் அஜய் (28) என்ள நபருடன் சேர்ந்து செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் விளம்பரம் செய்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களின் தொழில்களுக்காக திருநெல்வேலி மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்து 3 இளம் அழகிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் நிஷா மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அந்த 3 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

1newsnationuser5

Next Post

#ஈரோடு:சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்..!

Fri Nov 25 , 2022
ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் எருமை குட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் சஞ்சீவ் காந்தி (43), நாகராஜ் (38) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சீவ் காந்திக்கு திருமணம் ஆகிய நிலையில் 7 வயது மகளுடன்  அந்த பகுதியில் உள்ள சின்னகுளம் ஊரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். நாகராஜ் என்பவரும் தனது மனைவி மற்றும் ஒரு […]
n44522589816693457263009c08eba28555e87ac46f244d3f2c09b0468218191861dbde2d3f2d8f0691ab48

You May Like