இரும்பு கம்பியால் கொலை செய்யப்பட்ட 2 பால்காரர்கள்.! தென்காசியில் பரபரப்பு.!

தென்காசி மாவட்ட பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மகன் ஆனந்துடன் வசித்து வருகிறார். மகன் மற்றும் உறவினர் சூரியராஜ் என்பவரும் ஒன்றாக சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.


இருவருமே ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்று சுற்றுபுற கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இதனை தொடர்ந்து அந்த பாலை மறுநாள் காலை மக்களிடம் வினியோகிப்பார்கள். நேற்று இரவு இவர்கள் பால் எடுக்கச் சென்ற நிலையில், காணாமல் போய் விட்டனர்.

இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். உறவினர்களை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் 1 மணி அளவில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பலபத்திரராமபுரம் சேர்ந்த ஒரு காட்டுப்பகுதியில் ஆனந்த் மற்றும் சூரியராஜ் இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர் .

ஆனந்திற்கும், அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெண் பழக்கம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் சிலருடன் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

அமேசான் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்.. உயரதிகாரி வெளியிட்ட தகவல்.!

Sat Nov 12 , 2022
மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இது பற்றிய செய்தி வெளியான நிலையில், தற்போது ஆட்குறைப்பு வேலையில் இறங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் […]
Amazon profit and tax 2018

You May Like