நாளை முதல் மீன்களின் விலை உயரும் அபாயம்..!! காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறிய மீனவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பிப்.20ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Chella

Next Post

நேரு ஸ்டேடியம் அருகே பயங்கர விபத்து..!! தொழிலாளர்களின் கதி..? டெல்லியில் அதிர்ச்சி..!!

Sat Feb 17 , 2024
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே ஒரு தற்காலிக கட்டுமானம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் கேட் எண்-2 அருகே இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தற்காலிக கட்டுமானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த கட்டுமானம் எதிர்பாராதவிதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் […]

You May Like