தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை 5.4 செ.மீ. மழைக்கு பதிலாக 0.9 செ.மீ. மழையே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று வரை 0.9 செ.மீ. மழை என்பது இயல்பைவிட 83 விழுக்காடு குறைவானது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மார்ச் 1 முதல் இன்று வரை 1.5 செ.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், மழையே பதிவாகவில்லை. இதனால் சென்னையில் 100 விழுக்காடு மழை குறைந்துள்ளது. சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 100% மழை குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.