fbpx

இந்த அமவுண்டுக்கு மேல் பணம் ட்ரான்ஸாக்ஷன் செய்தால் உஷார்.. வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்.!

குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஓர் நிதியாண்டில் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் வருமான வரித்துறையினரால் நாம் கண்காணிக்கப்படுவோம். எனவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளை செய்தோம் என்றால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

நீங்கள் அறிக்கை தாக்கல் செய்யும்போது பண பரிவர்த்தனை குறித்து குறிப்பிடவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். நிதி முதலீடுகள், வங்கி இருப்பு, சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு சந்தைகள் என்று அதிகப்படியான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்ற இடங்களை வருமானவரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

உங்கள் வங்கியின் சேமிப்பு அக்கவுண்டில் நிதியாண்டு ஒன்றில் 10 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருந்தால், அதை நீங்கள் வருமானவரித்துறையிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அத்துடன் கரண்ட் அக்கவுண்டில் பணம் வைக்க 50 லட்சம் வரை வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி பிக்சட் டெபாசிட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்தால் அதை வருமானவரித்துறையிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் இதை வருமானத்துறையிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான செட்டில்மண்டுகளை நீங்கள் மேற்கொண்டு இருந்தால் கட்டாயம் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். அதற்கான அறிக்கைகளை நாம் தாக்கல் செய்ய வேண்டும்.

30 லட்சத்திற்கும் அதிகமான அசையா சொத்துக்களை வாங்கினாலோ அல்லது விற்றாலோ வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

Rupa

Next Post

அரை நிர்வாணத்துடன் கிடந்த கூலி தொழிலாளியின் சடலம்..!! கழுத்தை அறுத்தும், கல்லால் தாக்கியும் கொலை..!!

Tue Oct 18 , 2022
கூலி தொழிலாளி அரை நிர்வாணத்துடன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் உள்ள அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (45). இவர் மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயசாந்தி வயது (40). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தம்பதி இருவரும் பிரிந்து […]

You May Like