fbpx

இது தெரியுமா..! பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் வாழைப்பூ.!?

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றோம். வாழைப்பூ சமைப்பதற்கு மிகவும் நேரம் எடுக்கும் என்பதால் இதை பலரும் வீட்டில் சமைப்பதில்லை. ஆனால் இந்த வாழைப்பூவில் பலவகையான மருத்துவ குணநலன்கள் உள்ளன என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

சர்க்கரை நோய் – இந்த நோய் உள்ளவர்களை வாழைப்பூ அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள சொல்லி மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். வாழைப்பூவை பொரியல் செய்து அல்லது வாழைப்பூவை வேக வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் கணையம் வலுப்பெறும். இதனால் இன்சுலின் சுரந்து சர்க்கரை நோயும் கட்டுக்குள் வரும்.

மூல நோய் – இந்த நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமலும் இருக்கும்.

செரிமான பிரச்சனை –  நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக வாழைப்பூ இருந்து வருகிறது.

கர்ப்பப்பை கோளாறு – மாதவிடாயின் போது அதிகப்படியான வலி, கர்ப்பப்பையில் புண், அதிகமான இரத்தப்போக்கு போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வாழைப்பூ தீர்த்து வைக்கும். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக வாழைப்பூ பயன்படுகிறது.

Baskar

Next Post

இன்று மற்றும் நாளை... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்...! இதை கட்டாயம் செய்ய வேண்டும்...!

Tue Jan 9 , 2024
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு […]

You May Like