திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் அவர்களை தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சோதனை செய்தபோது திமிங்கலத்தின் உமிழ் நீர் வைத்திருந்தனர். 11 கிலோ எடையுள்ள 11 கோடி மதிப்புள்ள உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் திமிங்கலத்தின் உமிழ் பல கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. எனவே கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த உமிழ்நீரை பயன்படுத்தி சில நிறுவனங்கள் உயர் ரக வாசனை திரவியங்கள் தயாரிக்கின்றன. ஆம்பர் கிரீஸ் என்ற திமிங்கலத்தின் உமிழ் நீர் மதுபானங்களில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகின்றது. அரபு நாடுகுளில் இதற்கு மவுசு அதிகம். எனவே இதை கடத்திச் சென்று ஏற்றுமதி செய்கின்றனர். சில மருந்து தயாரிப்பில் கூட பயன்படுத்தப்படுகின்றது. தங்கத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாகும். எனவே தங்கத்தை விட இதை கடத்துவது அதிகரித்துள்ளது. இதை கடலில் மிதக்கும்தங்கம் என்கின்றார்கள்.
திமிங்கலம் தன் இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது. கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்களை இரையாக விழுங்கும்போது அவற்றின் கூர்மையான உறுப்புகள், முட்கள் போன்றவை திமிங்கலத்தின் செரிமான உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தும்.
அதைத்தடுப்பதற்காக, திமிங்கலம் ’அம்பர்கிரிஸ்’-ஐத் தற்காப்பு கவசமாகப் பயன்படுத்துகிறது. தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. அந்தக் கழிவுகள், அம்பர்கிரிஸ்ஸாக கடலில் மிதக்கின்றன. இவை, சூரியஒளி பட்டு கட்டியாகவும், கடல் நீரால் கறுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களுக்கு மாறுகின்றன.