முஸ்லீம் தம்பதிகளுக்கு இந்த விவாகரத்து சான்றிதழ் வழங்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

முஸ்லீம் பெண்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முஸ்லீம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை போல, மனைவிகள் கணவரை விவாகரத்து செய்யும் வகையில் குலா நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையின்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷரியத் கவுன்சிலில் மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சிவராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷரியத் கவுன்சிலுக்கு, அத்தகைய சான்றிதழ்களை வழங்க அதிகாரம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, குலா நடைமுறையின்படி விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சில உறுப்பினர்களைக் கொண்ட ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது எனவும், பிரிந்த தம்பதிகள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க குடும்ப நல நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

KOKILA

Next Post

மாற்றம்..! சிட்டா, பட்டா போன்ற நிலம் சார்ந்த ஆவணங்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்...! தமிழக அரசு உத்தரவு...!

Thu Feb 2 , 2023
தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விதிகள் 2011ன் படி தேவையின் அடிப்படையில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் குறித்த விபரத்தையும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் […]
tn gover

You May Like