இதுக்கா இப்படியொரு தண்டனை…மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்…கேரளாவில் பயங்கரம்!

கேரளாவில் 7 வயது மகனுக்கு பழுத்தக் கம்பியால் சூடுவைத்தும், கண்களில் மிளகாய் பொடியை தூவியும் தாய் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியில், 7வயது சிறுவன், விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் இருந்து இருசக்கர வாகன டயரை எடுத்து வந்துள்ளான். இதனை கண்ட தாயார், சிறுவனை அடித்ததுடன், இரும்பு கம்பியை அடுப்பில் பழுக்கவைத்து கை, கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும், மிளகாய் பொடியை கண்களில் தூவியும் சிறுவனை கடும் சித்ரவதை செய்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணிடம் பேசுவதற்காக வீட்டிற்கு சென்ற, அப்பகுதி வார்டு உறுப்பினர் ஜாய்மோள், சிறுவனின் இந்த நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஜாய் மோள் அளித்த புகாரின் அடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குமுளி போலீசார், கொடூர தாயை கைது செய்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்டு குமுளி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser3

Next Post

தமிழ்நாட்டில் இப்படி ஒரு அதிசய கிராமமா? 450 ஆண்டுகளாக மது, புகை பிடிப்பதற்கு தடை!

Tue Feb 7 , 2023
மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே […]
thenur madurai

You May Like