கேரளாவில் 7 வயது மகனுக்கு பழுத்தக் கம்பியால் சூடுவைத்தும், கண்களில் மிளகாய் பொடியை தூவியும் தாய் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியில், 7வயது சிறுவன், விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் இருந்து இருசக்கர வாகன டயரை எடுத்து வந்துள்ளான். இதனை கண்ட தாயார், சிறுவனை அடித்ததுடன், இரும்பு கம்பியை அடுப்பில் பழுக்கவைத்து கை, கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும், மிளகாய் பொடியை கண்களில் தூவியும் சிறுவனை கடும் சித்ரவதை செய்துள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் பேசுவதற்காக வீட்டிற்கு சென்ற, அப்பகுதி வார்டு உறுப்பினர் ஜாய்மோள், சிறுவனின் இந்த நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஜாய் மோள் அளித்த புகாரின் அடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குமுளி போலீசார், கொடூர தாயை கைது செய்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்டு குமுளி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.