1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ஹைதராபாத் நிஜாம் 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன?

151812893 1

உலகின் மிகப் பெரிய பணக்காரராம மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன?

அரச குடும்பங்கள் பற்றிய ​​பல கட்டுக்கதைகள் மற்றும் கூற்றுகள் கதைகளாக எப்போதுமே வலம் வருகின்றன.. இருப்பினும், அவற்றில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தான் இந்தக் கூற்றை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாமும், ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்பது பல ஆண்டுகளாக வலம் வரும் செய்தியாக உள்ளது.


பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நிதி திரட்ட ஹைதராபாத்திற்கு வருகை தந்த போது, தேசபக்தி ஆர்வத்தால் நிஜாம், 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார் என்ற ஒரு கதை வலம் வருகிறது.. இந்த கதை பெரும்பாலும் விசுவாசம் மற்றும் தாராள மனப்பான்மையின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த பிரபலமான கதை வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம் என்பது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது…

உண்மையில் 1965 அக்டோபரில் தொடங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில் நிஜாம் 4.25 லட்சம் கிராம் (425 கிலோ) தங்கத்தை முதலீடு செய்ததாக அதிகாரப்பூர்வ பதிவுகள் காட்டுகின்றன.. அதாவது 5,000 கிலோஒரு நன்கொடை அல்ல, ஆனால் ஒரு முதலீடாகும், இது ஆண்டுக்கு 6.5% லாபகரமான வட்டியையும் வழங்கியது.

டிசம்பர் 11, 1965 தேதியிட்ட தி இந்துவின் செய்தியின் படி, ஹைதராபாத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பிரதமர் சாஸ்திரி நிஜாமின் பங்களிப்பை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தங்கம் சுமார் ₹50 லட்சம் மதிப்புள்ள பழங்கால நாணயங்கள் அல்லது மொஹூர்கள் வடிவில் டெபாசிட் செய்யப்பட்டது. அவற்றின் பழமை காரணமாக, அரசாங்கம் அவற்றை வெளிநாடுகளில் விற்பதன் மூலம் இன்னும் அதிக வருமானத்தைப் பெற முடியும் என்று நம்பியது என்று பிரதமர் கூறியதாக இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் (TTD) 1.25 லட்சம் கிராம் தங்கம் மற்றும் தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களிடமிருந்து ரூ. 8 லட்சம் ரொக்கம் நன்கொடையாக பெறப்பட்டது. ஆனால் இவை நிஜாமின் வட்டி ஈட்டும் வைப்புத்தொகையைப் போலல்லாமல், உண்மையான நன்கொடைகள் என்று தி இந்து நாளிதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூற்று பல ஊடகங்களை உண்மையைக் கண்டறியத் தூண்டியுள்ளது. அந்த வகையில், நிஜாமின் 425 கிலோ பங்களிப்பு ஒரு நன்கொடை அல்ல, ஒரு மூலோபாய முதலீடு என்றும் நியூஸ் 18 தெரிவித்துள்ளது. 1962 இல் புதிதாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு நிதி போன்ற தேசிய நோக்கங்களுக்கு பங்களிக்க குடிமக்களை ஊக்குவிக்கும் பரந்த பொருளாதார மற்றும் தேசபக்தி உந்துதலின் ஒரு பகுதியாக இது இருந்தது.

பாதுகாப்பு தங்கப் பத்திரத் திட்டம் ஒரு வரி மன்னிப்பு முயற்சியாக செயல்பட்டது, இது சுங்க அல்லது வருமான வரிச் சட்டங்களின் கீழ் சட்ட விளைவுகளை எதிர்கொள்ளாமல் அறிவிக்கப்படாத தங்கத்தை மக்கள் முதலீடு செய்ய அனுமதித்தது.

நிஜாமின் முதலீட்டின் இறுதிப் பயனாளி குறித்து, ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், தனியுரிமைக் கொள்கை காரணமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j) இன் கீழ் நிராகரிக்கப்பட்டது. நிஜாமின் பேரன்களில் ஒருவரான நஜாப் அலி கான், இறுதியில் யாருக்குப் பணம் கிடைத்தது என்பது தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்.. மேலும், நிஜாம் கான் 52 அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளதாகவும்; அவற்றில் எது பயனடைந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

Read more: IPL பட்டத்தை வென்ற கையோடு உரிமையை விற்க திட்டமிடும் RCB உரிமையாளர்..!! அணியின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Next Post

5350 ஆண்டுகள் பழமையான தமிழர்கள்.. இதை மறந்துடாதீங்க.. மத்திய அமைச்சருக்கு தங்கம் தென்னரசு தரமான பதிலடி..

Tue Jun 10 , 2025
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். […]
7777

You May Like