சமூக நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ள மூத்த குடிமக்கள் செயலியில் (Senior Citizen App) அருகில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை விவரங்கள், குறைகளை தெரிவித்தல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதை அனைவரும் பயன்படுத்துமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக் கொண்டுள்ளார்.
இச்செயலியின் செயல்பாட்டை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி, அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள். மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள்.
மாற்று மருத்துவமனை விவரங்கள். மூத்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள்.மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன் பேசியில் (Play Store) வழியாகவோ அல்லது tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.