மிரட்டும் கனமழை..!! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2ஆம் தேதி புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் பருவமழை சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மழை மற்றும் புயலை முன்னிட்டு ஆட்சியர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மழை தீவிரம் காரணமாக 14 மாவட்ட ஆட்சியர்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கர்ப்பிணிகள் நீரிழிவு நோயால் பாதிப்பு..!! அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

Thu Nov 30 , 2023
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”உலகளவில் கர்ப்பிணிகளில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 7 முதல் 10 ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9.25 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்வாக நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்களுடன் கர்ப்பக் கால நீரிழிவு நோய் பற்றிய புதிய வழிகாட்டி […]

You May Like