சிவகங்கை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகள் காமாட்சி என்கின்ற கவிதா(30). இவர் தற்போது பல்லடம் அடுத்துள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இதற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு தெரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது நாகை மாவட்டம் திருக்குவளை புரியல துறை சேர்ந்த அத்தியப்பன் என்பவரின் மகன் பிரகாஷ்( 36) எந்த வருடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி சுண்டமேடு பகுதியில் தங்கி வாடகைக்கு வேன் ஓட்டி வருகிறார் இத்தகைய நிலையில், இருவருக்கும் மில்லில் ஒன்றாக வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் பிரகாஷ் காமாட்சி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், திடீரென்று பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சியின் கழுத்தை அடுத்துள்ளார். இதில் அவர் சத்தம் போட்டதால் உடனடியாக அங்கிருந்து பிரகாஷ் தப்பி சென்று விட்டார்.
இவருடைய சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காமாட்சி அங்கு தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காவல்துறையினரின் வாகன சோதனையில் அந்த வழியாக வந்த பிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.