தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு…! தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…!

TNPSC 2025 2

தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213) தேர்வர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.

இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 1,905 கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுக் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது 28.09.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

காலை 9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சக்திவாய்ந்த புற்று மண் திருநீர்..!! தொடர்ந்து 12 மணி நேரம் தீமிதி திருவிழா..!! கேட்ட வரம் கொடுக்கும் பண்ணாரியம்மன்..!!

Sat Sep 27 , 2025
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். […]
Pannari Amman 2025

You May Like